“நீட் விலக்கிற்கு திமுக கட்டாய கையெழுத்து பெறுகிறது” - சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

பள்ளி மாணவர்களிடம் திமுக தரப்பில் நீட் எதிர்ப்புக்காக கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக கூறி, எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று, அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியிருந்தது.

நீட் விலக்கு - திமுக மீது புகார்
“0 எடுத்தால் போதும், டாக்டர் ஆகிடலாம்!” - நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி

இந்நிலையில் இத்த்திட்டத்திற்காக திமுக, பள்ளி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்குவதாக கூறி எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், அடுத்த வாரம் முறையிட அறிவுறுத்தியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com