கோவை: பிரதமர் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளை பங்கேற்க வைத்த விவகாரம் - மூன்று பள்ளிகள் மீது வழக்கு

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவிகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
School students
School studentspt desk

செய்தியாளர்: சுதீஸ்

கோவைக்கு மார்ச் 18 அன்று வருகை தந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் சின்மயா மெட்ரிக் பள்ளி, வடவள்ளி சின்மயா சிபிஎஸ்இ பள்ளி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 22 பேர் பங்கேற்க அழைத்து வரப்பட்டனர்.

PM Modi
PM Modi

இந்துக் கடவுள்கள் போல உடையணிந்து, கட்சி சின்னங்கள் மற்றும் காவி நிறத் துணிகளை அணிவித்து ரோடு ஷோ நிகழ்வில் மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்டனர். இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

School students
கோவை: பிரதமரின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்பு... விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில், பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வைப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் 3 பள்ளிகள் மீதும் தனித் தனியாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மூன்று தனியார் பள்ளிகள் மீதும் குழந்தைகள் நலச் சட்டம் பிரிவு 75-ன் கீழ் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com