கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் கார் விழுந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை ராயப்பேட்டை இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் உசேன் என்பவரின் மகன் ஏஜாஸ். சேலத்தில் இவருடைய மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது, குழந்தையை பார்க்க தனது குடும்பத்தினருடன் நேற்று சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர், இந்நிலையில், ஏஜாஸ் ஓட்டி வந்த காரில் அவருடைய தாய் ஹமீம், தங்கை அம்ரின், சித்தி நமீம் அவருடைய மகள் சுபேதா ஆகிய ஐந்து பேர் சென்றுள்ளனர்,

இந்நிலையில், இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது தூக்கக் கலக்கத்தில் ஏஜாஸ் காரை தடுப்புக்கட்டையில் மோதியுள்ளார். இதில் நிலைதடுமாறிய கார், சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஹமீம், அம்ரின், சுபேதா ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர், காரை ஓட்டி சென்ற ஏஜாஸ் மற்றும் அவருடைய சித்தி நவீம் ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தால் உளுந்தூர்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார், விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com