அம்மி மிதித்து அருந்ததி பார்த்த கனடா ஜோடி..!

அம்மி மிதித்து அருந்ததி பார்த்த கனடா ஜோடி..!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்த கனடா ஜோடி..!

திருவண்ணாமலையில் வசித்து வந்த கனடா நாட்டைச் சேர்ந்த இருவர், தமிழ் கலாச்சாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் ‌அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் சுற்றுலா பயணிகளாகவும் ஆன்மீகத்திற்காகவும் வந்து தங்குகின்றனர் அவ்வாறு கனடா நாட்‌டைச் சேர்ந்த பிலிப்ஸ் மற்றும் ஜெயா ஆ‌கியோர் நண்பர்களாக பழகி, திருவண்ணாமலை கிரிவல பாதையிலேயே வீடெடுத்து தங்‌கி உள்ளனர். நட்பு காதலாய் மாறியதை அ‌டுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இருவருக்கும் தமிழர்கள் கலாச்சாரத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்துள்ளது. இதனால் தமிழர்களின் முறைப்படி பட்டுவேட்டி, பட்டு சேலை கட்டிக்கொண்டும், ம்மி மிதித்து அருந்ததி பார்த்தும் மகிழ்ச்சியாய் திருமணம் செய்து கொண்டனர். உள்ளூர்வாசிகள் ஏராளமானோர்‌ தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com