புதுச்சேரியில் 3வது நாளாக பேருந்துகள் இயங்கவில்லை

புதுச்சேரியில் 3வது நாளாக பேருந்துகள் இயங்கவில்லை

புதுச்சேரியில் 3வது நாளாக பேருந்துகள் இயங்கவில்லை
Published on

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் பேருந்துகள் 3வது நாளாக இயங்கவில்லை.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மாத ஊதியத்தை வழங்கக்கோரி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனையிலிருந்து பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடு‌பட்டுள்ளனர்.

அதன் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்பி வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com