சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள் நள்ளிரவில் திடீர் போராட்டம்

சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள் நள்ளிரவில் திடீர் போராட்டம்
சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள் நள்ளிரவில் திடீர் போராட்டம்

சென்னையில், மாநகர பேருந்து ஓட்டுநரை மதுபோதையில் இருந்த இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கியதால் நள்ளிரவில் ஒட்டுநர்களும், நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிராட்வேயில் இருந்து தாம்பரம் செல்லும் 21G பேருந்தில் ஏறிய தமிழ்வாணன் மற்றும் சந்தோஷ் சதிஷ் என்ற இருவர், டிக்கெட் வாங்க மறுத்துள்ளனர். நடத்துநர் டிக்கெட் வாங்கக் கூறியதால், ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒட்டுநரையும், நடத்துநரையும் ஆவேசமாக அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த ஒட்டுநர் ஜாகிர்உசேன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அறிந்த 70க்கும் மேற்பட்ட ஒட்டுநர்களும், நடத்துநர்களும் நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com