வழிப்பறி வழக்கு: விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்த நபர் தப்பியோட்டம்

வழிப்பறி வழக்கு: விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்த நபர் தப்பியோட்டம்
வழிப்பறி வழக்கு: விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்த நபர் தப்பியோட்டம்

சென்னை போரூரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்த நபர் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போரூரில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய மொட்டை ராஜி (19) என்பவரை, போரூர் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் விசாரணைக்காக இன்று அழைத்துச் சென்றனர். அப்போது அந்த நபர் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கி தப்பி ஓடினார். அந்த நபரை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றும் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து தப்பியோடிய மொட்டை ராஜியை தேடும் பணியில் போரூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பியோடிய மொட்டை ராஜி குறித்த தகவல் இருந்தால் போரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் நிலைய தொலைபேசி நம்பர் அடங்கிய தகவல் சமூக வலை தளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட நபர் தப்பியோடிய சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com