எதிரில் தாய், குழந்தையை கண்டதும் ஆவேசத்தை அடக்கி தாவி குதித்த பாசக்கார காளை..!

எதிரில் தாய், குழந்தையை கண்டதும் ஆவேசத்தை அடக்கி தாவி குதித்த பாசக்கார காளை..!
எதிரில் தாய், குழந்தையை கண்டதும் ஆவேசத்தை அடக்கி தாவி குதித்த பாசக்கார காளை..!

சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின்போது ஆவேசமாக வந்த காளை, எதிரில் தாய், குழந்தை இருப்பதை கண்டு ஆவேசத்தை அடக்கி அவர்களை தாண்டி குதித்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில், ஆவேசமடைந்த காளை ஒன்று சீறிப்பாய்ந்து ஓட்டம் பிடித்தது. அப்போது காளையின் எதிரே திடீரென ஒரு தாய் குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார். காளை அவர்களை முட்டி தூக்கி வீசி விடுமோ என அங்கிருந்தவர்கள் பயத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அன்பு கொண்ட அந்தக் காளை தனது ஆவேசத்தை அடக்கி தாயையும் குழந்தையையும் தாண்டி குதித்து ஓடியது. இதனால் தாயும் குழந்தையும் லாவகமாக உயிர் தப்பினர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com