மனைவியின் தம்பியை வெட்டிக்கொன்ற கணவர் - பட்டப்பகலில் பரபரப்பு

மனைவியின் தம்பியை வெட்டிக்கொன்ற கணவர் - பட்டப்பகலில் பரபரப்பு
மனைவியின் தம்பியை வெட்டிக்கொன்ற கணவர் - பட்டப்பகலில் பரபரப்பு

மதுரையில் குடும்ப தகராறில் மைத்துனரை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அழகுமலை மகன் அறிவழகன். இவரை குடும்பத்தகராறு காரணமாக, இவரது அக்காவின் கணவரான முருகையா நடுரொட்டில் வைத்து சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அறிவழகன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் தலைமையிலான காவல்துறையினர், அறிவழகன் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், நடுரோட்டில் வைத்து மைத்துனனை வெட்டி கொன்ற முருகையாவை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். முருகையா தன் மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அடிக்கடி முருகையா, அறிவழகன் இடம் கேட்டுள்ளார். இதனால், இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மோதலின் காரணமாக அறிவழகனை அவர் வெட்டிக்கொன்றதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் அதிகமான ஆட்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நடந்த இச்சம்பவத்தால், உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com