மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை... மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை... மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை... மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை சிம்மக்கல்லில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை, திமுக தலைவர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் பொது இடத்தில் கருணாநிதிக்கு முதல் முறையாக மதுரையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு திமுக சார்பில் மதுரை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் ஒன்பதரை அடியிலான முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக தலைவருக்கு, மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி வெள்ளி செங்கோலை வழங்கினார். சிலையை வடிவமைத்த திருவள்ளூரை சேர்ந்த தீனதயாளனுக்கு மு.க.ஸ்டாலின் மோதிரத்தை பரிசாக வழங்கினார். தமிழகத்தில் கருணாநிதிக்கு பொது இடத்தில் முதன்முறையாக மதுரையில் மட்டுமே சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com