”விமானம் வெடிக்கப் போகிறது” ஆகாசா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

சென்னை ஏர்போட்டில் இருக்கும் ஆகாசா நிறுவன விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் விமானத்தில் சோதனையிட்டனர்.
Summary

ஆகாசா ஏர் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் விமானங்களை இயக்கி வந்தது. ஆனால், நிர்வாகப் பிரச்சனை காரணமாக கடந்த 2 மாதங்களாக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள ஆகாசா விமானம் வெடிக்க உள்ளதாக, ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தை டேக் செய்து மர்ம நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த மிரட்டலால், மோப்ப நாய்களோடு உடனடியாக விமானநிலையம் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனையிட்டனர். மேலும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே, மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com