கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி கட்டணம் இரண்டு மடங்காக  உயர்வு!

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி கட்டணம் இரண்டு மடங்காக  உயர்வு!
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி கட்டணம் இரண்டு மடங்காக  உயர்வு!

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்ய இரண்டு மடங்காக கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் சாமானியர்களும் படகு சவாரி செய்து வந்த நிலை மாறி, பணம் படைத்தவர்களுக்கு தனி கட்டணம், சாமானியர்களுக்கு தனி கட்டணம் என பிரித்தும், வார நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு கட்டணமாகவும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தனி கட்டணம் என விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதில் சிறப்பு கட்டணமாக பணம் படைத்தவர்கள் மூன்று மடங்கு அதிக விலை கொடுத்தால் வரிசையில் நிற்காமல் முக்கியஸ்தராக கருதப்பட்டு உடனடியாக படகில் ஏற்றவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  100 ரூபாயாக இருந்த சாதாரண  படகு சவாரி கட்டணம் தற்பொழுது 200 ரூபாயாகவும்,  சிறப்புக்கட்டணம் 250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு உள்ளுர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com