ப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்கொலை முயற்சி

ப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்கொலை முயற்சி
ப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்கொலை முயற்சி

உலக முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் ப்ளூ வேல் கேம் விளையாடிய இளைஞர் ஒருவர்,  கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (19). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜெகதீஷ் நேற்று கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தற்கொலை முயற்சி குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். 

அப்போது ஜெகதீஷ் கடந்த 2 மாதங்களாக ப்ளூ வேல் விளையாடி வந்ததாகவும், அதன் விளைவால் தற்கொலைக்கு முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞரின் உடலின் பல இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்ட பல காயங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற ஜெகதீஷ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com