ஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்

ஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்
ஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று நடைபெற உள்ள ஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிந்துவர அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சமீபத்தில் மாமல்லபுரத்தில் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்திற்கு பிரதமர் கொடுத்த முக்கியத்துவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வரும் அக்டோபர் 31ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளன்று நடைபெற உள்ள யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் வேட்டி, சட்டை மற்றும் துண்டுடன் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com