“ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்” இபிஎஸ்-ன் கூட்டணி முறிவு கருத்து குறித்து கரு.நாகராஜன் பதில்

”அண்ணாமலை தலைமையில் எங்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஒரு நாள் பொறுத்திருங்கள். இது குறித்து நாளை கருத்து தெரிவிக்கப்படும்” என்கிறார் கரு.நாகராஜன்.

சேலம், எடப்பாடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தற்போது பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதிமுக கூட்டணியில் சேர உள்ள கட்சிகள் குறித்து, பொறுத்திருந்து பாருங்கள்.

நேற்றையதினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம் எல் ஏக்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகவே. கூட்டணி விவகாரத்தில் ‘INDIA’ கூட்டணிதான் நடகமாடுகின்றது” என்று பேசினார்.

இது குறித்து புதிய தலைமுறையிடம் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “டெல்லி சென்றுள்ள மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்றிரவு தான் திரும்பியுள்ளார். நாளை தலைவர் அண்ணாமலை தலைமையில் எங்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஒரு நாள் பொறுத்திருங்கள். இது குறித்து நாளை கருத்து தெரிவிக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com