“விஜய் அரசியல் பேசக்கூடாது என யாரும் கூற முடியாது” - பொன்.ராதாகிருஷ்ணன்

“விஜய் அரசியல் பேசக்கூடாது என யாரும் கூற முடியாது” - பொன்.ராதாகிருஷ்ணன்

“விஜய் அரசியல் பேசக்கூடாது என யாரும் கூற முடியாது” - பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

நடிகர் விஜய் நாட்டின் குடிமகன் என்றும் அவர் அரசியல் கருத்தை பேசக்கூடாது என யாரும் கூற முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் தேச ஒற்றுமை என்ற தலைப்பில் ‘ஒரே தேசம் ஒரே சட்டம்’ என்ற மக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கீழடி என்பது தமிழர்களின் பெருமைகளில் ஒன்று. அது எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மத்திய அரசு முழுக்க முழுக்க துணையாக இருக்கும். அரசியலில் அடிப்படை அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள் காங்கிரஸார் என்பது நன்றாகத் தெரிகிறது. 

இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சித் தலைமை விரைவில் முடிவு எடுக்கும். நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன். அவர் அரசியல் கருத்தை கூறக் கூடாது என யாரும் கூற முடியாது. உண்மையான அரசியல் கருத்துகளை சொன்னால் யாருக்கும் வருத்தம் கிடையாது. அனைவருக்கும் சந்தோசம் தான். அப்படி இல்லை என்றால் அவருடைய மனசாட்சி அவரை குத்தும். இது நடிகர் விஜய்க்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பொருந்தும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com