"ஹைதராபாத் தேர்தலில் பாஜக எழுச்சி... அடுத்த ஆண்டு தமிழகத்தில்!" - குஷ்பு நம்பிக்கை

"ஹைதராபாத் தேர்தலில் பாஜக எழுச்சி... அடுத்த ஆண்டு தமிழகத்தில்!" - குஷ்பு நம்பிக்கை
"ஹைதராபாத் தேர்தலில் பாஜக எழுச்சி... அடுத்த ஆண்டு தமிழகத்தில்!" - குஷ்பு நம்பிக்கை

ஹைதராபாத் தேர்தலில் பாஜகவின் எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஹைதராபாத்தில் 2016-இல் வெறும் 4 இடங்களை பெற்ற பாஜக தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது, பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி.

ஹைதராபாத் தேர்தலில் பாஜகவின் இந்த எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 2021-ல் தமிழகத்திலும் பாருங்கள், யாராலும் நம்மை தடுக்க முடியாது” என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com