இதுவரை பாஜகவில் பொறுப்பு, இனி ரஜினி கட்சி நிர்வாகி... - அர்ஜுன மூர்த்தி யார்?

இதுவரை பாஜகவில் பொறுப்பு, இனி ரஜினி கட்சி நிர்வாகி... - அர்ஜுன மூர்த்தி யார்?
இதுவரை பாஜகவில் பொறுப்பு, இனி ரஜினி கட்சி நிர்வாகி... - அர்ஜுன மூர்த்தி யார்?

ரஜினி தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்த அர்ஜுன மூர்த்தி தன்னுடைய ட்விட்டர் ப்ரொஃபைலை மாற்றியுள்ளார்

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். , “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதியம் நிகழும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும், கட்சி மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினி அறிமுகம் செய்தார்.

அர்ஜுன மூர்த்தி, பாஜகவின் நிர்வாகியாக இருந்தவர். அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பதவியில் இருந்து வந்தார். வேல்யாத்திரையில் கலந்துகொண்டு கைதான பாஜகவின் நிர்வாகிகளில் இடம்பெற்றவர். இன்று அவருக்கு ரஜினி பதவி கொடுத்தவுடன் பலரும் அர்ஜுன மூர்த்தியின் ட்விட்டர் கணக்கை பகிர்ந்து, அவர் பாஜக நிர்வாகி என பதிவிட்டனர்.

ஆனால் சற்று நேரத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தின் ர் ப்ரொஃபைல் தகவல் மாற்றப்பட்டது. அதில், Now with Thalaivar என மாற்றம் செய்துள்ளார். அவர் பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைலில் மட்டும் தகவலை மாற்றியுள்ளார்.

இதனால் அவர் பாஜகவில் உள்ளாரா? அல்லது விலகிவிட்டார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது பாஜக. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com