அவரது ட்வீட்டில், '’நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில் முள்ளிமலை வார்ட் கவுன்சிலர் செல்வி ரக்க்ஷனா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கையில், அப்பயணத்தைத் துண்டித்த அவரது மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது தந்தை கமலக்கண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.