பல புயல்களை கண்ட 105 வயது மூதாட்டி - 3 தலைமுறை ஒன்றுகூடி கொண்டாடிய பிறந்த நாள் விழா!

பல புயல்களை கண்ட 105 வயது மூதாட்டி - 3 தலைமுறை ஒன்றுகூடி கொண்டாடிய பிறந்த நாள் விழா!
பல புயல்களை கண்ட 105 வயது மூதாட்டி - 3 தலைமுறை ஒன்றுகூடி கொண்டாடிய பிறந்த நாள் விழா!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பத்திற்கும் மேற்பட்ட புயல்களை பார்த்து 100 வயதை கடந்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு உள்ள 105 வயது மூதாட்டிக்கு 3 தலைமுறை குடும்பத்தினர் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வு காண்போரை நெகிழ வைத்ததுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அனவயல் ஜீவா நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி என்பவரின் மனைவி பொன்னம்மாள் (105). இவர்களுக்கு, மூன்று மகன்கள் உள்ள நிலையில் பொன்னம்மாள், கணவருடன் சேர்ந்து உழைத்து தனது குழந்தைகளை வளர்த்து காப்பாற்றி அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் துரைச்சாமி இறந்த நிலையில் பொன்னம்மாள், தன் மகன்களின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். எனினும் தற்போது வரையில் பொன்னம்மாள் தனது சுய தேவைகளை, தானே பூர்த்தி செய்து கொள்வதோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்து அனைவரையும் வியக்க வைத்து வருகிறார்.

மூன்று தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி, உள்பட 30க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர். இந்நிலையில் பொன்னம்மாளின் 105வது பிறந்த நாள் விழாவை அவரது பேரன்கள் வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி பொன்னம்மாளின் 105-வது பிறந்தநாள் விழாவிற்காக அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் அக்கிராம மக்களுக்கு கொடுத்து அழைப்பு விடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பொன்னம்மாளின் 105வது பிறந்த நாள் விழாவில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி அந்த பாட்டிக்கு வாழ்த்து கூறி, ஆசிர்வாதம் பெற்றனர். மேலும் வந்தவர்கள் அனைவருக்கும் கறிவிருந்தும் பரிமாறப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அனவயல் கிராமத்தில் 105 வயது மூதாட்டிக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வு காண்போரை நெகிழ வைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com