\
பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
Published on

தனியார் உணவு விடுதியில்‌ பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சிலர், சென்னையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் உணவு அருந்திய அவர்கள் பேருந்து மூலம் சொந்த ஊர் திரும்பினர். மதுராந்தகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, குழந்தைகள் உள்பட 12 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com