திருடிய வாகனத்தில் ‘டிரிபுள்ஸ்’ சென்ற திருடர்கள் - சிறுவன் உட்பட மூவர் கைது

திருடிய வாகனத்தில் ‘டிரிபுள்ஸ்’ சென்ற திருடர்கள் - சிறுவன் உட்பட மூவர் கைது
திருடிய வாகனத்தில் ‘டிரிபுள்ஸ்’ சென்ற திருடர்கள் - சிறுவன் உட்பட மூவர் கைது

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29ஆம் தேதியன்று காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய தனது இருசக்கர வாகனம் காணவில்லை என்று நகர காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இந்த நிலையில், இரவு நேரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததை கண்டு அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வந்தது திருட்டு வாகனம் என்றும், அதனை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 17 வயது சிறுவன் மற்றும் லோகேஷ், கவிமணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com