சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் பைக் ரேஸ்

சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் பைக் ரேஸ்
சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் பைக் ரேஸ்

சென்னையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவது மீண்டும் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. 

நேற்றிரவு மெரினா கடற்கரைப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டனர். வண்டியின் முன்புற சக்கரத்தை தூக்கியபடி சாகசத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தச் சாலை வழியாக சென்ற மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இரவு நேரம் என்பதால் பெறும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பைக் ரேசில் இடுபட்டவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆனாலும் காவல்துறை நடவடிக்கை அவ்வபோது எடுத்து வந்தாலும் கூட இளைஞர்கள் பைக் ரேஸ் மீது கொண்ட ஆர்வத்தினால் இந்த பைக் சாகசம் ஒரு தொடர்கதை ஆகி உள்ளது.

இந்த பைக் ரேசின் விளைவாக பல இளைஞர்களில் உயிர் பறிபோய்யுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com