தமிழ்நாடு
ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட பொதுமக்கள் முயற்சி
ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட பொதுமக்கள் முயற்சி
கோத்தகிரியில் உள்ள குருக்கத்தி கிராமத்துக்குள் புகுந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் பொதுமக்களும், வனத்துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஊருக்குள் அவ்வப்போது நுழையும் கரடி ஒன்று தேயிலை தோட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கரடியை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பதற்காக முகாமிட்டுள்ள வனத்துறையினர், அதன் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரண்டு கூண்டுகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.