மார்ச் 28 ,29 இல் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் - பாதிக்கப்படுமா வங்கி சேவை?

மார்ச் 28 ,29 இல் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் - பாதிக்கப்படுமா வங்கி சேவை?
மார்ச் 28 ,29 இல் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் - பாதிக்கப்படுமா வங்கி சேவை?

மார்ச் மாதம் 28, 29ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளதால் வங்கிச்சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தாலும், இதனால் தங்கள் வங்கியின் சேவைகளில் குறைந்தளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com