அரியலூரில், வங்கிகள் முன்பு கை குழந்தைகளுடன் வாடிக்கையாளா்கள் நீண்ட வரிசையில் தனிநபர் இடைவெளி இல்லாமல் நகையை மீட்க காத்திருக்கின்றனர்.
அரியலூா் நகரில் முன்னறிப்பு இன்றி கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி 32 வங்கிக் கிளைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட வங்கிகள் கடந்த 11 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் அரியலூரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த அக்டோபா் மாதத்திற்கு முன்பு விவசாய நகைக் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு வங்கிகள் மூடப்பட்ட நாட்களில் தேதி முடிந்ததால் அவா்கள் 4 சதவீதம் வட்டிக்கு பதில் 7 சதவீதம் வட்டி கட்டி நகையை மீட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இதனால் வங்கிகள் முன்பு கை குழந்தைகளுடன் வாடிக்கையாளா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளிகள் இல்லாமல் நகையை மீட்க காத்திருக்கின்றனா். மேலும் வங்கிகள் மூடப்பட்டிருந்த நாட்களில் காலாவதி ஆன நகைக்கடன்களுக்கு அபராத தொகை வசூல் செய்ய கூடாது என அவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.