அகழாய்வில் கண்டறியப்பட்ட சங்கு வளையல்கள்
அகழாய்வில் கண்டறியப்பட்ட சங்கு வளையல்கள்pt desk

விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சங்கு வளையல்கள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: A,மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையிலான சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுpt desk

இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் இருந்து சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. 3ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலமாக முன்னோர்கள் அணிகலன்களுக்கும் அழகிருக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்று அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட சங்கு வளையல்கள்
பழனி: சானிடைசர் பேரல் வெடித்து தீப்பிடித்து எரிந்த கார் - கேரள பக்தர்கள் காவல்நிலையத்தில் புகார்

தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com