தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் - உஷார் நிலையில் காவல்துறை

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் - உஷார் நிலையில் காவல்துறை

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் - உஷார் நிலையில் காவல்துறை
Published on

தமிழகத்தில் ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தமிழக காவல்துறையினருக்கு பெங்களூர் காவல்துறையினர் ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில், தமிழகத்தில் ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளனர். அத்துடன் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் அந்தத் தகவலில் தெரிவித்துள்ளனர். பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர் தகவல் அளித்துள்ளதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபிக்கு தமிழக அரசு முதன்மைச் செயலர் அறிவுத்தல் செய்துள்ளார். டிஜிபி மட்டுமின்றி, ரயில்வே டிஜிபி, ஐஜிக்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கும் அரசு முதன்மை செயலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே இலங்கை குண்டு வெடிப்பில் எதிரொலியாக தமிழக அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com