ஊரடங்கால் வாழைத்தார் விற்பனை பாதிப்பு... அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஊரடங்கால் வாழைத்தார் விற்பனை பாதிப்பு... அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ஊரடங்கால் வாழைத்தார் விற்பனை பாதிப்பு... அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஊரடங்கு காரணமாக கரூரில் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாததால், மரத்திலேயே வீணாகி வரும் பழங்களை, விவசாயிகள் இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம், புகழூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வீசிய சூறாவளிக் காற்றிலிருந்து தப்பித்த வாழை மரங்களில் வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல், மரத்திலேயே அழுகி வருவதால், சில விவசாயிகள் அதனை இலவசமாக மக்களுக்கு வழங்குகின்றனர். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com