குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

குற்றால அருவியில் குளிக்க அனுமதி!
Published on

குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக பெய்த ’ஓகி’ புயல் மழை காரணமாக தென்மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் அங்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாமல் சபரிமலை செல்லும் பக்தர்களும் குற்றால அருவியில் நீராடி மகிழ்கின்றனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com