வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற திருத்தணி அதிமுக வேட்பாளர்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற திருத்தணி அதிமுக வேட்பாளர்
வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற திருத்தணி அதிமுக வேட்பாளர்

திருத்தணி வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்ற அதிமுக வேட்பாளர் கோ.அரி வரிசையில் சுமார் அரை மணிநேரம் காத்திருந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுது காரணத்தால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 399 வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெரும்பாலான இடங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில் திருத்தணி அமிர்தபுரம், ஆலமரம் தெரு பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதியில் பல வாக்குச்சாவடிகளில் மின்தடை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்குப்பதிவு தொடங்க சுமார் ஒருமணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

அமிர்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த அதிமுக வேட்பாளர் கோ.அரி சுமார் அரைமணி நேரம் நின்றிருந்த நிலையில் திடீரென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால், வாக்களிக்க முடியாமல் அதிமுக வேட்பாளர் திரும்பிச் சென்றார். திருத்தணி தொகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுவதால், வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com