தமிழ்நாடு
எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிப்பு
எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிப்பு
'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிதை, சிறுகதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் எழுத்தாளர் மு.முருகேஷ். 2010ஆம் ஆண்டு முருகேஷ் எழுதிய ‘குழந்தைகள் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எழுத்தாளர் மு.முருகேஷுக்கு 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற சிறுகதை தொகுப்பிற்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.