நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
Published on

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்‌த‌ வழக்கில் சிறையில் இருக்கும் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி, யாருக்காக அவ்வாறு பேசினார் என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்கவில்லை எனவும், ஆகையால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி வழக்கு தொடர்ந்தார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலா தேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் மனுவில் கூறப்பட்டது. அதேபோல், நிர்மலாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மற்றொரு வழக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிர்மலா தேவியை சந்திக்கவோ, அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கவோ இயலவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அவரது ஜாமீன் மனுவை இந்த நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு அரசு தரப்பில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, நிர்மலா தேவியிடம் விசாரணை‌ நடத்துவதற்காக இன்று மதியம் 2.15 மணிக்கு அவரை நேரில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நிர்மலா தேவி தொடர்பான இரண்டு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தது. முதலில் ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் ஜாமீன் வழங்கவில்லை. தொடர்ந்து ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அதனால், இனியாவது ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கோ, தனிநபருக்கோ பேட்டி அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

இதனிடையே, சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நிர்மலா தேவி இந்த வழக்கில் நேரில் ஆஜரானார். இதன் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com