கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு – கோவையில் சோகம்

கோவை வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கெ;ண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவரது மனைவி, தாயார் மற்றும் மகள் ஆகிய 4 பேருடன் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக யாரும் வெளியே வராத நிலையில், வீட்டினுள் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அருகே வசிப்பவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Death
DeathFile Photo

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்தபோது 4 பேர் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து 4 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் 4 பேரும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com