தமிழகத்தில் பாதுகாப்பற்ற ரத்தத்தால் 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

தமிழகத்தில் பாதுகாப்பற்ற ரத்தத்தால் 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு
தமிழகத்தில் பாதுகாப்பற்ற ரத்தத்தால்  4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

தமிழகத்தில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் ஜனவரிக்குள்ளான கடைசி 4 மாதங்களில் கிட்டத்தட்ட 15 கர்ப்பிணி பெண்கள் ரத்த பக்கவிளைவுகளால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ரத்த வங்கி. அதாவது ரத்த வங்கியில்  உள்ள சிதைந்து போன ரத்தத்தை பயன்படுத்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் கர்ப்பிணிகள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி,

தமிழகத்தில் உள்ள தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மருத்துவமனைகளில் சிதைந்த நிலையில் உள்ள ரத்தங்கள் ரத்த வங்கிகளில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை முறையாக பரிசோதனை செய்து சரியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான ரத்தம் என்று மருத்துவர் சான்றிதழ் அளித்த பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் கிருமிகள் பாதிக்கப்பட்ட ரத்தத்தை மருத்துவர்கள் செலுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ரத்தம் பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் சான்றிதழ் அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com