தேனி: ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை - ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு

தேனி அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தைpt desk

செய்தியாளர்: திருக்குமார்

தேனி மாவட்டம் போடி சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அழகர்சாமி தெருவை சேர்ந்தவர்கள் விஜயன் - பராசக்தி தம்பதியர். பராசக்தி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று காலை திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர் விஜயன் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்
ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்pt desk

தகவல் அறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்கப்பாண்டி மற்றும் மருத்துவ உதவியாளர் பூபதி ஆகியோர் கர்ப்பிணிப் பெண் பராசக்தியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு போடி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்நிலையில், பராசக்திக்கு பிரசவ வலி அதிகரித்ததை அடுத்து மருத்துவ உதவியாளர் பூபதி ஆம்புலன்ஸில் வைத்து பிரசவம் பார்த்து உள்ளார். இதில், பராசக்திக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பிறந்த குழந்தையுடன் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சாதுரியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்கப்பாண்டி மற்றும் மருத்துவ உதவியாளர் பூபதிக்கு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com