இப்போதுதான் அருண்ஜேட்லி உட்கார வைத்துப் பேசினார் : அய்யாக்கண்ணு

இப்போதுதான் அருண்ஜேட்லி உட்கார வைத்துப் பேசினார் : அய்யாக்கண்ணு

இப்போதுதான் அருண்ஜேட்லி உட்கார வைத்துப் பேசினார் : அய்யாக்கண்ணு
Published on

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை திமுக எம்பி திருச்சி சிவாவுடன் விவசாயிகள் சந்தித்து பேசினார். இந்த முறைதான் அருண் ஜேட்லி தங்களை உட்கார வைத்துப் பேசியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 15ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் பலரும் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், விவசாயிகளை சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அவருடன் சென்று விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அருண்ஜேட்லியை சந்தித்துப் பேசினர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நிதியமைச்சர் அருண் ஜேட்லியை 3ஆவது முறையாக இன்று சந்தித்ததாகவும், முதல்முறையாக இன்றுதான் அமரவைத்து பேசியதாகவும் குறிப்பிட்டார். விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அருண் ஜேட்லி உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். விவசாயிகள் உயிரிழப்புகளுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com