மெரினாவில் டைவ் அடித்து குளித்த போலீஸ் : படுகாயத்துடன் மீட்பு

மெரினாவில் டைவ் அடித்து குளித்த போலீஸ் : படுகாயத்துடன் மீட்பு
மெரினாவில் டைவ் அடித்து குளித்த போலீஸ் : படுகாயத்துடன் மீட்பு


மெரினா கடலில் பாய்ந்து குளித்த காவலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விழுப்புரம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் ஆதிசங்கர் (26). இவர் ஆவடி பட்டாலியன்-2 தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணிபுரிகிறார். இந்நிலையில் தனது நண்பர் ராமையா என்பவருடன் ஆதிசங்கர் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அண்ணா சதுக்கத்தை சுற்றிப்பார்த்த பின்னர், அதன்பின்புறம் இருந்த கடல் பகுதிக்கு அவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது தடையை மீறி மெரினா கடலில் பாய்ந்து ஆதிசங்கர் குளித்துள்ளார். 

அப்போது அலை சீறிவந்து அவரை புரட்டிப்போட, தரையில் கழுத்து இடித்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமையா மற்றும் அங்கிருந்த சிலரால் மீட்கப்பட்ட காவலர், உடனே சிகிச்சைக்காக போரூரை அடுத்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் காவல்துறையினர், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பொறுப்புடன் இருக்க வேண்டிய காவலரே, தடையை மீறி கடலில் குளித்தது மக்களுக்கு தவறான முன் உதாரணமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com