ரயில் நிலையம் அருகே கிடந்த கட்டுக்கட்டான பணம்.. பாராட்டை பெற்ற ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை

ரயில் நிலையம் அருகே கிடந்த கட்டுக்கட்டான பணம்.. பாராட்டை பெற்ற ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை
ரயில் நிலையம் அருகே கிடந்த கட்டுக்கட்டான பணம்.. பாராட்டை பெற்ற ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை

சீர்காழி ரயில் நிலையம் அருகே பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.62,500 பணத்தை, நிலைய அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன். இவர், தனது ஆட்டோவை சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தி சவாரி ஓட்டிவருகிறார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து சரவணன் என்ன இருக்கிறது என்று பார்த்துள்ளார்.

அதில், ரூ.62,500 பணம் இருந்தது. உடனடியாக சற்றும் யோசிக்காமல் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் சீர்காழி ரயில் நிலைய அலுவலர் மணிகண்டனிடம் பணத்தை ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட நிலைய அலுவலர் உரிய ஆதாரங்களை தந்து பணத்தை தொலைத்தவர் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரின் இந்த நேர்மையை அறிந்து சீர்காழி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் சரவணனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டினர். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து சீர்காழி பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com