மேம்பால தடுப்புச் சுவர் மீது ஆட்டோ மோதி விபத்து: கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

மேம்பால தடுப்புச் சுவர் மீது ஆட்டோ மோதி விபத்து: கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு
மேம்பால தடுப்புச் சுவர் மீது ஆட்டோ மோதி விபத்து: கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பாடி மேம்பாலத்தின் மீதுள்ள தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதியதில் எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்த பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, வில்லிவாக்கம், திருநகர் 15-வது தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (43). டிவி மெக்கானிக்கான இவர், பாடியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் வந்த ஆட்டோவை வில்லிவாக்கம், அகத்தியர் நகரைச் சேர்ந்த பிரபாகரன் (38) என்பவர் குடிபோதையில் ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் பாடி மேம்பாலத்தின் மீது ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த பாக்கியராஜ், மேம்பாலத்தின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்த ஆட்டோ ஒட்டுநர், ஆட்டோவை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com