அஸ்வினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

அஸ்வினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
அஸ்வினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னையில் அழகேசனால் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

சென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் பிரேத பரிசோதனை இன்று காலை நிறைவுப்பெற்றது. மருத்துவமனை வளாகத்தில் குவிந்த அஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.  கருத்து‌ வேறுபாடுகளால் அஸ்வினி பிரிய முடிவெடுத்தபோது அழகேசன் அவரை தொந்தரவு செய்ததாகவும் இதுகுறித்து  மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாகவும் அப்போது காவல் ஆய்வாளர் அழகேசன் அவரை எச்சரித்து அனுப்பியதாக கூறினார். அழகேசனின் உறவினர்கள் இங்கு வர வேண்டும்.உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றனர். மதுரவாயல் காவல்துறையினர் இதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றனர்.


இதனையடுத்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் உடற்கூறு செய்யும் இடத்திற்கு வந்தார். காவல்துறையினர் அளித்த சமாதானத்தை அடுத்து அஸ்வினியின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அஸ்வினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com