சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் : அசாம் இளைஞர் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் : அசாம் இளைஞர் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் : அசாம் இளைஞர் கைது
Published on

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் பிரித்திகா(8) அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, சற்று நேரத்திற்கு பின் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை சுந்தரம் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அடுத்த நாள் காலையில் முட்புதர்களுக்கு நடுவே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரிடம் போலீசார் 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com