டீசலை உறிஞ்சி எடுத்தபோது விபரீதம் - அசாமிலிருந்து வேலைதேடி வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

டீசலை உறிஞ்சி எடுத்தபோது விபரீதம் - அசாமிலிருந்து வேலைதேடி வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

டீசலை உறிஞ்சி எடுத்தபோது விபரீதம் - அசாமிலிருந்து வேலைதேடி வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

அசாமிலிருந்து வேலை தேடிவந்தவர் டீசலை உறிஞ்சி எடுத்தபோது வாய்க்குள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, அசாம் மாநிலத்தை சேர்ந்த சோனுசூட்(35), என்பவர் வேலை தேடி வந்துள்ளார். இவர் கடந்த 25ஆம் தேதி துரைப்பாக்கத்தில் வேலை பார்க்கும் சுஜித் என்பவரை சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு கேனில் இருந்த 200 லிட்டர் டீசலை, டியூப் மூலம் உறிஞ்pr மற்றொரு கேனுக்கு மாற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டீசல் வாய்க்குள் சென்றது. இதனால் மயங்கிய அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com