தன்பால் உறவில் இருந்த பெண்ணை கடத்திய குடும்பம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

தன்பால் உறவில் இருந்த பெண்ணை கடத்திய குடும்பம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு
தன்பால் உறவில் இருந்த பெண்ணை கடத்திய குடும்பம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

குடும்பத்தினரால் கடத்தப்பட்ட பெண் 21 வயது பூர்த்தியடைந்தவர் என்பதால், அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரை சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,  எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜூலை 16ம் தேதி நாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கடத்திச் சென்று விட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தன்பாலின உறவை ஏற்காமல், அதனை மாற்றுவதாக கூறி அப்பெண்ணிற்கு சிகிச்சை வழங்குவதாக கூறி (shock treatment) அதிர்ச்சி வைத்தியம்  கொடுத்து வருகின்றனர்.  இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதோடு அப்பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார். இதுதொடர்பாக வத்தலகுண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்பெண்ணின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஆகவே பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே அவரது விருப்பப்படி  செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிக்க: சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு குரங்கம்மையா? புதுக்கோட்டையில் பரபரப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com