"அதெப்படி, எல்லா கோளாறான இயந்திரங்களிலும் தாமரைக்கே வாக்கு பதிவாகிறது?" - ஜோதிமணி கேள்வி!

"அதெப்படி, எல்லா கோளாறான இயந்திரங்களிலும் தாமரைக்கே வாக்கு பதிவாகிறது?" - ஜோதிமணி கேள்வி!

"அதெப்படி, எல்லா கோளாறான இயந்திரங்களிலும் தாமரைக்கே வாக்கு பதிவாகிறது?" - ஜோதிமணி கேள்வி!
Published on

'அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்திரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது?  ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?' என கேள்வியெழுப்பியுள்ளார் ஜோதிமணி எம்.பி. 

தமிழகத்தில்நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, விருதுநகர் சத்ரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவாகுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக வாக்காளர்கள் குற்றஞ்சாட்டினர். உடனடியாக, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை பரிசோதிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''நேற்று விருதுநகரில் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். ஆனால், அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?'' என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com