“COVAXIN தடுப்பூசி பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்”- தொல்.திருமாவளவன்

“COVAXIN தடுப்பூசி பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்”- தொல்.திருமாவளவன்

“COVAXIN தடுப்பூசி பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்”- தொல்.திருமாவளவன்
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் சத்தீஷ்கரை போலவே தமிழகத்திலும் COVAXIN தடுப்பு மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,

“பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்ற போதுமான சோதனைகளை முடிக்காத தடுப்பூசிகளை பயன்படுத்தக் கூடாது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சோதனை வெள்ளோட்டம் பார்க்க மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? சத்தீஷ்கரை போலவே தமிழகத்திலும் COVAXIN தடுப்பு மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com