அருப்புக்கோட்டை: மின்னல் தாக்கி ஆடு மேய்க்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை: மின்னல் தாக்கி ஆடு மேய்க்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை:  மின்னல் தாக்கி ஆடு மேய்க்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்க்கச்சென்ற தந்தை, மகன் மீது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி, ராமலட்சுமி தம்பதியரின் மகன் ராஜேஸ். டிப்ளமோ படித்துள்ள இவர், தனது தந்தை செந்தூர்பாண்டியுடன் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தந்தை மகன் இருவரும் சுக்கிலநத்தம் அருகே உள்ள அருணாச்சலபுரம் கிராமத்தில் ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் மழையில் நனையாமல் இருப்பதற்காக தந்தை, மகன் இருவரும் அங்கிருந்த பெரியண்ணசாமி கோயில் மரத்தடியில் ஒதுங்கியுள்ளனர். இந்நிலையில் திடீரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் மழைக்காக ஒதுங்கி இருந்த தந்தை செந்தூர் பாண்டி மகன் ராஜேஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்க்கச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகன் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com