கன்னியாகுமரி: அருமனை ஸ்டீபன் மீது பாலியல் புகாரில் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: அருமனை ஸ்டீபன் மீது பாலியல் புகாரில் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி: அருமனை ஸ்டீபன் மீது பாலியல் புகாரில் வழக்குப்பதிவு
கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததாக கைதான அருமனை ஸ்டீபன் உள்ளிட்டோர் மீதான பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவனை பிரிந்த பெண் ஒருவரை, தனியார் நிறுவன உரிமையாளர் ஜெபர்சன் வினிஷ் லால், அருமனை ஸ்டீபன், ஜான் பிரைட், கென்சிலின் ஜோஸப், கலிஸ்டர் ஜெபராஜ் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை செய்து வீடியோ பதிவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
இதனிடையே அருமனையில் சிறுபான்மையினர் கூட்டத்தில் இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக பேசிய வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் கைதான அருமனை ஸ்டீபன் உள்ளிட்டோர் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அருமனை ஸ்டீபன் உட்பட 8 பேர் மீது சிறை வைத்தல், திருட்டு, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் மார்த்தாண்டம் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com