செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழி – ஜெயக்குமார்

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழி – ஜெயக்குமார்

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழி – ஜெயக்குமார்
Published on

உதயநிதி கார் இலங்கைக்கு சென்றால் இலங்கை தமிழர்களின் ஆவி சும்மா விடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5-வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த் ஜெயக்குமார் பேசும்போது, திமுக ஆட்சியில் கவர்னர் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லை. தலையே சரியில்லாத நேரத்தில் வால் எப்படி சரியாக இருக்கும்.

திமுக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டம் 356-ஐ நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்கள் தடுக்கப்பட முடியும். போலீசார் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாகதான் அமையும்.

திமுக அரசின் மக்கள் விரோத செயல் குறித்து அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. இதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி எனது காரை எடுத்துக் கொண்டு செல்லலாம், ஆனால், கமலாலயம் செல்ல வேண்டாம் என உதயநிதி கூறியது சரியில்லை. உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு செல்லுங்கள். அங்கு 1.5 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அவரை சும்மா விடாது.

செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டு, மத்திய அரசின் மீது திமுக அரசு பழி போட்டுள்ளது. 2113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்டபடுத்தும் இந்த பாவம் சும்மா விடாது' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com