``திருமாவையும் சீமானையும் கைது செய்து, அவர்கள் கட்சிகளை தடை செய்ய வேண்டும்”-அர்ஜூன் சம்பத்

``திருமாவையும் சீமானையும் கைது செய்து, அவர்கள் கட்சிகளை தடை செய்ய வேண்டும்”-அர்ஜூன் சம்பத்
``திருமாவையும் சீமானையும் கைது செய்து, அவர்கள் கட்சிகளை தடை செய்ய வேண்டும்”-அர்ஜூன் சம்பத்
Published on

“பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் தொல்.திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கைது செய்ய வேண்டும்” என்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார் 10 பேர், கைகளில் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் பேசுகையில், “மத்திய அரசு இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் அமைப்பை தடை செய்ய பிறகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அந்த இயக்கத்தை ஆதரித்து பேசி வருகின்றனர். சீமான் ஏற்கனவே யாசிக் மாலிக்கை தமிழகம் அழைத்து வந்து தனித்தமிழ்நாடு கோரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார். ஆ.ராசா ஒரு கிறிஸ்தவர். அவரது மனைவி கிறிஸ்த்தவர்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு ஒரு தலைப்புச்சமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தடை செய்யும் நோக்கில் பூவுலகின் நண்பர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த விவகாரங்கள் தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்துறை அமைச்சகத்தில் கோரிக்கை மனுவை அளிக்க உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com